annamalai

annamalai

Saturday, August 22, 2015

ஜோதிடத்தில் இதுதாங்க உண்மை !



 
அனைத்து மக்களும் இன்றைய தேதியில் ஜோதிட பலன்களை கேட்டு பயந்துள்ளனர். ஒரு ஜோதிடனாக இந்த பயத்தை சரி செய்வது என்னுடைய கடமையாகும்

பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் குரு பெயர்ச்சி, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி, ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ராகு, கேது பெயர்ச்சி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எல்லா கிரகங்களும் பெயர்ச்சியாகிக்கொண்டேதான் இருக்கிறது, ஆனாலும் குரு பெயர்ச்சி,சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் காலங்கள் அதிகம். எனவே அவை முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் சனி பெயர்ச்சி மிகவும் கவனமாக அனைவராலும் கவனிக்கப்படுகிறது. அதிலும் ஏழரை வருட சனி, அஷ்டமத்து சனி வருகிறது என்றால் அனைவரும் பயந்து விடுகிறார்கள். காரணம் சனி பகவான் அவரவர் கர்ம வினைப்படி அவருக்கு கிடைக்கவேண்டிய நன்மை/ தீமைகளை வாரி வழங்குவார். இதில் யாரும் தப்பிக்க முடியாது, இது முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை,

ஆனால் அதற்கு முன் நம்முடைய சுய ஜாதகத்தில் சனியினுடைய நிலை என்ன ? உச்சமா, நீசமா, பகை வீடா, நட்பு வீடா என பார்க்க வேண்டும். ஜாதகரின் நட்சத்திரத்திற்க்கு சனியின் நிலை - உத்திரட்டாதி, பூசம், அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் நல்ல பலனே கிடைக்கும். சனி இருக்கும் வீட்டில் எத்தனை பரல்கள், சனியின் சுய பரல், சனியினுடன் இருக்கும் கிரகங்கள் இவையனைத்தையும் பார்த்து சனியின் நிலையை பார்க்க வேண்டும். இதில் சனியினுடைய நிலை ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், சுய பரல் அதிகமாக இருந்தால் (6 பரல் மற்றும் அதற்கு மேல்) இருந்தால் எழரை சனி மற்றும் அஷ்டமத்து சனி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

இது தவிர ற்போது நடந்து கொண்டிருக்கும் தசை /புத்தி நல்ல தாசாவாகவும், நல்ல புத்தியாகும் நடந்து கொண்டிருந்தால் சனி பெயர்ச்சி அந்த ஜாதகருக்கு சாதகமாக இல்லாமல் இருந்தாலும் கெட்ட பலன்களை கொடுக்காது.

சனி பெயர்ச்சி சாதகமாக அமையாமல் இருந்து மோசமான வலிமை குறைந்த தாசா புத்தி நடந்தால் அவர்கள் கண்டிப்பாக கஷ்டங்களை அனுபவித்தே ஆக வேண்டும். யாரும் தப்பிக்க முடியாது.

மேலே சொன்ன இதே விதிதான் குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சிக்கும்.

எனவே பொதுவான பலன்களை வைத்து யாரும் குழம்ப வேண்டாம் ஒரு நல்ல ஜாதகர் மூலம் தற்பொழுது நடக்கும் தாசா புத்தி பற்றி தெரிந்து பின் தெளிந்து நிம்மதியாக வாழுங்கள்!. அண்ணாமலையார் அருள் புரிவார்.

நன்றி,

அண்ணாமலை

Thursday, August 20, 2015

கட்டண ஜோதிட சேவை:

வணக்கம் நண்பரே!

கட்டண சேவையில் வருவதற்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன்.

ஒரு ஜாதகத்திற்கு Rs.250/- மட்டுமே கட்டணமாக நீங்கள் செலுத்த வேண்டும். இந்த Rs.250/- உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

பலன்களை போனில் மட்டுமே சொல்ல முடியும். வேலைப்பளு அதிகம் என்பதால் இந்த நடைறையை அமல்படுத்துகிறேன்.

ஈ-மெயில் மூலம் உங்கள் ஜாதகத்தின் ராசி, அம்சம், பிறந்த தேதி, பிறந்த ஊர், பிறந்த நேரம் ஆகியவை உள்ள பக்கங்களை ஸ்கேன் செய்தோ அல்லது ஸ்மாட் போன் மூலம் போட்டோ எடுத்தோ astroannamalai1972@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிய பின் 9566205743 என்ற நம்பருக்கு தொடர்புகொள்ளவும்.

நன்றி,

அண்ணாமலை

கடவுளை வணங்கும் முறை யாது?



 நாம் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு உருவத்தில் கடவுளை வணங்குகிறோம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கையில் முன்னேருகிறார்கள், வாழ்வின் உயரத்தை அடைகிறார்கள். காரணம் என்ன? நாம் கடவுளை வணங்கும் முறை தான் காரணம்.

இந்து மதம் ஏன் இவ்வளவு கடவுளை வைத்துள்ளது என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விஷயங்கள் பிடிக்கும். ஒரு சிலருக்கு அமைதி பிடிக்கும், சிலருக்கு கோபம் பிடிக்கும், சிலருக்கு புத்திசாலியாக இருப்பது பிடிக்கும், சிலருக்கு ஆற்றல் பிடிக்கும்,சிலருக்கு உலகியல் வாழ்க்கை பிடிக்காது, ஒரு சிலருக்கு உலகியல் வாழ்க்கை மட்டுமே பிடிக்கும். அமைதியை விரும்புபவர்கள் சிவனை பார்த்தவுடன் அவர்கள் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி ஏற்படும் அவரை அவர்களுக்கு தெரியாமல் பிடிக்கும். புத்திசாலியாக இருப்பவர்களுக்கு விநாயகரை பிடிக்கும். கோப குணம் கொண்டவர்களுக்கு காளி தேவியை பார்த்தவுடன் "அம்மா" என சரணாகதி அடைந்துவிடுவார்கள். ஆற்றல் உடையவர்களுக்கு முருகனை பிடிக்கும். உலகியல் வாழ்க்கை பிடிக்காது என்பவர்கள் தியான கோலத்தில் இருக்கும் தட்ணாமூர்த்தியை வணங்குவர். உலகியல் வாழ்க்கை மட்டுமே பிடிக்கும் என்பவர்கள் வேங்கடாசலபதியை வணங்குவர்.

இப்படி அவரவர் விருப்பதிற்கேற்ப கடவுளை வணங்கத்தான் இந்துமதம் இத்தனை கடவுள்களை படைத்துள்ளது. ஆனால் நடப்பது என்ன ? எந்த ஒரு தெய்வத்தையும் குறிப்பிட்டு வணங்காமல் எல்லா தெய்வங்களையும் நாம் வணங்குவதால் நமக்கு எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்திடமிருந்தும் கிடைக்கும் அருள் அல்லது அனுகிரகம் நமக்கு முழுமையாக கிடைப்பதில்லை. இதற்கு பதில் நீங்கள் ஒரு சிவ பக்கதராக இருந்து எப்போழுதுமே "ஓம் நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தால் அந்த அண்ணாமாலையாரின் பரிபூரண ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். உங்களை உங்கள் இஷ்ட தெய்வம் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் காத்து நிற்கும். உங்களை எல்லா விதத்திலும் பணம், புகழ், பதவி என எல்லாவற்றையும் உங்களுக்கு எப்போழுது தேவையோ அப்பொழுது உங்களுக்கு கொடுக்கும். இது 200% உண்மை. எனவே அனைத்து தெய்வங்களையும் வணங்குங்கள் ஆனால் ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபடுங்கள். வாழ்வில் மிக மிக உன்னதமான வாழ்வை அடைவீர்கள்.

இஸ்லாமிய மதமும், கிருஸ்தவ மதமும் உலகில் வலிமையான மதமாக மாறியதற்கு முக்கிய காரணம். ஒரு தெய்வ வழிபாடுதான்.

எனவே அனைத்து தெய்வங்களையும் வணங்குங்கள் ஆனால் ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபடுங்கள்.

நன்றி,

அண்ணாமலை

Friday, August 14, 2015

ஜோதிடம் உண்மையா ? - பகுதி 2






சரணாகதி என்றால் நாம் முழுமையாக கடவுளை நம்பி அவரை உணர்ந்து அவரிடம் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஒப்படைப்பது ஆகும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கடவுளை வணங்க கூட நமக்கு நேரம் கிடையாது, இதில் எங்கு சரணாகதி அடைவது. இறை நம்பிக்கை குறைந்து காணப்படும் இந்நாளில் எப்படி சரணாகதி பற்றி பேச முடியும். எல்லாம் என்னால் தான், நான் தான் பெரிய ஆள், எனக்கு தெரியாத விஷயமே கிடையாது என்று ஒவ்வொருவரும் கர்வத்துடன் இருந்தால் எப்படி கடவுளை வணங்குவார்கள். கடவுளை வணங்கவே கஷ்டமாக இருக்கும் இக்கால கட்டததில் எப்படி சரணாகதி அவரிடம் வரும். வராது மறாக கிரகங்களில் வலிமை அவரை தாக்க ஆரம்பிக்கும். அவர் கிரகங்களில் பிடியில் வருகிறான். ஜோதிடத்தை கையில் எடுக்கிறார். ஜோதிடம் வழி நடக்க ஆரம்பிக்கிறான். யாரையும் நாம் குறை கூற முடியாது காலத்தில் கோலம் இது. தெய்வ நம்பிக்கையின் குறைபாடும், நாம் தான் பெரிய ஆள் என நினைக்கும் மனோபவம் தான் காரணம்,

அந்த காலத்தில் குகைகளில் முனிவர்கள் தவம் செய்தார்கள், ஏன் தெரியுமா? அப்பொழுது தான் கிரகங்களில் தாக்கம் இருக்காதாம்.

ஆனால இன்றோ இறை நம்பிக்கை இல்லை, நம்மால் குகையில் போய் தவம் செய்யவும் முடியாது,

எனவே இந்த கால கட்டத்தில் ஜோதிடம் அனைவராலும் வரவேற்க்கப்படுகிறது,

நன்றி,

அண்ணாமலை

Thursday, August 13, 2015

ஜோதிடம் உண்மையா ?




 
ஜோதிடம் என்பது உண்மையா அல்லது அது வெறும் மூட பழக்கவழக்கமா ? என்ற கேள்வி பொதுவாக நிலவி வருகிறது.

ஆனால் உண்மையில் கிரகங்கள் இருப்பது உண்மையானால் ஜோதிடம் என்பதும் உண்மையே. ஆனால் அதை தெளிவாக கணித்து தர ஒருவரால் முடிந்தால் அவர்தான் சிறந்த ஜோதிடர்.. ஆனால் அது முடியுமா ? என்றால் நல்ல திறமையான வல்லுனர்களால் கண்டிப்பாக முடியும்.

ஜோதிடம் என்பது ஒரு கடல், அதில் உள்ள அனைத்து விதிகளையும் மறக்காமல் புரிந்து சரியான இடத்தில் உபயோகித்தால் அவர் சிறந்த ஜோதிடர். முன்பெல்லாம் ஜாதக கட்டத்தை பார்த்தவுடன் இந்த ஜாதகத்தில் இந்த பிரச்சனை இருக்கிறது இது இல்லை என சில நொடி நேரத்தில் சொன்ன மற்றும் சொல்லும் ஜோதிடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை கண்டிபிடிப்பது சிரமமான விஷயம்.

மேலும் தவறான வழிகாட்டியினால் உங்களுக்கு சரியான பதில் கிடைக்காமல் பெரிய குழப்பம் அடைவீர்,

குரு பெயர்ச்சியால் இந்த துன்பமா? சனி பெயர்ச்சியால் இந்த துன்பமா ? ராகு கேது பெயர்ச்சியால் இந்த துன்பமா ? தற்போது நடைபெற்றுவரும் தசையாலா ? தற்போது நடைபெற்றுவரும் புத்தியால ? இது தவிர தினசரி பலன் ? மாத பலன் ? வருட பலன் ? என எல்லவற்றையும் படித்து குழம்பி எது சரி என்று தெரியாமல் குழம்பும் மக்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

அந்த அண்ணாமலையாரை நம்புங்கள் அவரிடம் சரணாகதி அடையுங்கள் எல்லா துன்பதிற்கும் ஒரு விடை கிடைக்கும்,.

அப்படியானால் ஜோதிடம் தேவையில்லையா ? இறைவனை வழிபடும் முறை யாது ? அடுத்த பகுதியில் .. ..

அன்புடன்,

அண்ணாமலை

Saturday, August 8, 2015

வணக்கம் நண்பர்களே .. ..



 அனைவருக்கும் வணக்கம் ,, ,,


என்னுடைய ஆன்மீக கருத்துக்களையும் ஜோதிட கருத்துக்களையும் வெளியிட பல நேரங்களில் முயன்றுள்ளேன். அதற்கான ஒரு வாய்ப்பாக இதை கருதி என்னுடைய கருத்துக்களை அநத அருணாசலேஸ்வரர் ஆசியுடன் உங்கள் முன் வெளியிடுகிறேன். நிறைய  ஜோதிட வல்லுனர்கள் மற்றும் ஆன்மீக அறிஞர்கள் இருக்கும் இடம் வலைதளம்,. அதில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சியான விஷயமாக கருதுகிறேன் வாசகர்களாகிய நீங்களும் அதற்கு உறுதுனையாக இருந்து என் பாதையில் செல்ல உங்களில் மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி,

அண்ணாமலை