annamalai

annamalai

Friday, September 4, 2015

படித்ததில் பிடித்தது:






 முகநூலில் வந்தது பிடித்ததால் பதிவிட்டுள்ளேன்.


நன்றி,
அண்ணாமலை

Wednesday, September 2, 2015

சொந்தவீடு யோகம்


 


சொந்த வீட்டுமனை அமைய  ஜாதக ரீதியாக 4ம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். ஜென்ம லக்னத்திற்கு 4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும்  உண்டாகும். 4ம் அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ம் இடத்து அதிபகளுடன் இணைந்து அமையப்பெற்றோ இருந்தாலும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தாலும் சுப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய, 2,11 க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

அதிபதியும், 4ம் வீட்டையும் குரு போன்ற சுபகிரக பார்வை செய்வது நல்லது. 4ம் வீட்டதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். அது போல பூமி காரகன் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று பலமாக 4ல் அல்லது 4 ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தால்ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்.

4ம் வீட்டில் எத்தனை பலமான கிரகங்கள் அமைகின்றதோ, 4ம் அதிபதியுடன் எத்தனை பலமான கிரகங்கள் சேர்க்கை பெறுகின்றதோ, 4ம் வீட்டை எத்தனை பலமான கிரகங்கள் பார்வை செய்கின்றதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய யோகம் உண்டாகும்.

வீட்டின் அமைப்பு:

ஒருவருக்கு சொந்தவீடு அமையக்கூடிய யோகம் உண்டானாலும், அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதனையும் 4 ம் பாவத்தின் மூலம் அறியலாம். சிலருக்கு மாட  மாளிகையும், உயரமான கட்டிடங்களில் வசிக்கக்கூடிய யோகமும், சிலருக்கு ஓட்டு வீடு, குடிசை வீடு என அவரவர் 4ம் பாவத்தில் உள்ள கிரகங்களுக்கேற்றவாறு வீடுகள் அமையும்.

பொதுவாக சூரியன், கேது 4ம் வீட்டில் இருந்தால் அமையக்கூடிய வீடானது பார்பதற்கு அழகாக இருந்தாலும் உறுதி தன்மையற்றதாக இருக்கும்.

சந்திரனிருந்தால் அழகான புதிய வீடு அமையும் யோகமும், சுக்கிரன் இருந்தால் மிகவும் அம்சமான வீடும் அமையும்.

குரு இருந்தால் மிகவும் உறுதியான தரமிக்க வீடு அமையும். புதிய வீடும் கட்டக்கூடிய யோகம் உணண்டாகும். 

செவ்வாய் இருந்தால் வீட்டில் விரிசல்கள் உண்டாகக்கூடிய நிலை, சில நேரங்களில் வீட்டிற்கு தீயால் பாதிப்புபள் உண்டாகும்.

சனி, ராகு அமையப்பெற்றாலோ, 4ம் வீட்டையோ, 4ம் அதிபதியையோ, சனி, ராகு பார்த்தாலும் பழைய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.


நன்றி,
அண்ணாமலை
 

தெய்வங்களே தெய்வங்களை வழிப்பட்ட வரலாறுகள்:





 
 
 நாம் தெய்வங்களை வழிபடுவது இருக்கட்டும். தெய்வங்களே தெய்வங்களை வழிப்பட்ட வரலாறுகள் உண்டு. அதை இப்போது பார்ப்போம்.

1. திருவேற்காட்டில் உள்ள கருமாரியம்மனை முருக பெருமான் வணங்கியதாக ஸ்தலவரலாறு சொல்கிறது. 

2. அக்னிபகவான் கண்ணொளி பெற திருத்தேங்கூர் வெள்ளிமலை நாதரை வழிபட்டார்.

3. நளன் சனி பகவானிடம் இருந்து விடுபட்டவுடன், நளன் மட்டும் அல்ல சனிபகவானும் வழிபட்ட இடம் திருவாரூர் தியாகராஜ சுவாமி.

4. காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சியை உபாசனை செய்து மாகலக்ஷ்மி சௌந்தர்ய லக்ஷ்மியானாள்.

5. இதே காஞ்சி வரதராஜ பெருமானை பிரம்மா தேவன் வழிபட்ட வரலாறு உண்டு.

6. கல்விகடவுள் என்று போற்றப்படும் ஹயக்கரிவர் ராஜராஜேஸ்வரியான லதிதா திரிபுர சுந்தரியை வணங்கி உயர்வு பெற்றாராம். 

7. திருவிண்ணகர் ஒப்பிளியப்பனை வணங்கி அவரையே பூமாதேவி மணந்து கொண்டாள்.

8. சிக்கல் சிங்காரவேலனை அகத்தியர், விஸ்வாமித்திரர், வசிட்டர், நாரதர் வழிபாட்டு உள்ளனர்.

9. திருசெந்தூர் முருக பெர்ருமானை குருபகவான் வணங்கியதாக வரலாறு.

10.கண்டியூர் ஹர சாப விமோசன பெருமானை வணங்கி சிவபெருமானே தன் சாபம் நீங்க பெற்றாராம்.

11.ராமணனும் கண்ணனும் வழிபட்ட இடம் தான் ராமேஸ்வரம்.

12.
பிரம்மாவும் விஷ்ணுவும் வழிபட்ட சிவன் இருக்கம் இடம்தான் திருநள்ளாறு 

நன்றி,
அண்ணாமலை