அனைத்து மக்களும் இன்றைய தேதியில் ஜோதிட பலன்களை கேட்டு பயந்துள்ளனர். ஒரு ஜோதிடனாக இந்த பயத்தை சரி செய்வது என்னுடைய கடமையாகும்
பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் குரு பெயர்ச்சி, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி, ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ராகு, கேது பெயர்ச்சி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எல்லா கிரகங்களும் பெயர்ச்சியாகிக்கொண்டேதான் இருக்கிறது, ஆனாலும் குரு பெயர்ச்சி,சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் காலங்கள் அதிகம். எனவே அவை முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் சனி பெயர்ச்சி மிகவும் கவனமாக அனைவராலும் கவனிக்கப்படுகிறது. அதிலும் ஏழரை வருட சனி, அஷ்டமத்து சனி வருகிறது என்றால் அனைவரும் பயந்து விடுகிறார்கள். காரணம் சனி பகவான் அவரவர் கர்ம வினைப்படி அவருக்கு கிடைக்கவேண்டிய நன்மை/ தீமைகளை வாரி வழங்குவார். இதில் யாரும் தப்பிக்க முடியாது, இது முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை,
ஆனால் அதற்கு முன் நம்முடைய சுய ஜாதகத்தில் சனியினுடைய நிலை என்ன ? உச்சமா, நீசமா, பகை வீடா, நட்பு வீடா என பார்க்க வேண்டும். ஜாதகரின் நட்சத்திரத்திற்க்கு சனியின் நிலை - உத்திரட்டாதி, பூசம், அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் நல்ல பலனே கிடைக்கும். சனி இருக்கும் வீட்டில் எத்தனை பரல்கள், சனியின் சுய பரல், சனியினுடன் இருக்கும் கிரகங்கள் இவையனைத்தையும் பார்த்து சனியின் நிலையை பார்க்க வேண்டும். இதில் சனியினுடைய நிலை ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், சுய பரல் அதிகமாக இருந்தால் (6 பரல் மற்றும் அதற்கு மேல்) இருந்தால் எழரை சனி மற்றும் அஷ்டமத்து சனி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
இது தவிர தற்போது நடந்து கொண்டிருக்கும் தசை /புத்தி நல்ல தாசாவாகவும், நல்ல புத்தியாகும் நடந்து கொண்டிருந்தால் சனி பெயர்ச்சி அந்த ஜாதகருக்கு சாதகமாக இல்லாமல் இருந்தாலும் கெட்ட பலன்களை கொடுக்காது.
சனி பெயர்ச்சி சாதகமாக அமையாமல் இருந்து மோசமான வலிமை குறைந்த தாசா புத்தி நடந்தால் அவர்கள் கண்டிப்பாக கஷ்டங்களை அனுபவித்தே ஆக வேண்டும். யாரும் தப்பிக்க முடியாது.
மேலே சொன்ன இதே விதிதான் குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சிக்கும்.
எனவே பொதுவான பலன்களை வைத்து யாரும் குழம்ப வேண்டாம் ஒரு நல்ல ஜாதகர் மூலம் தற்பொழுது நடக்கும் தாசா புத்தி பற்றி தெரிந்து பின் தெளிந்து நிம்மதியாக வாழுங்கள்!. அண்ணாமலையார் அருள் புரிவார்.
நன்றி,
அண்ணாமலை
No comments:
Post a Comment