annamalai

annamalai

Wednesday, September 2, 2015

தெய்வங்களே தெய்வங்களை வழிப்பட்ட வரலாறுகள்:





 
 
 நாம் தெய்வங்களை வழிபடுவது இருக்கட்டும். தெய்வங்களே தெய்வங்களை வழிப்பட்ட வரலாறுகள் உண்டு. அதை இப்போது பார்ப்போம்.

1. திருவேற்காட்டில் உள்ள கருமாரியம்மனை முருக பெருமான் வணங்கியதாக ஸ்தலவரலாறு சொல்கிறது. 

2. அக்னிபகவான் கண்ணொளி பெற திருத்தேங்கூர் வெள்ளிமலை நாதரை வழிபட்டார்.

3. நளன் சனி பகவானிடம் இருந்து விடுபட்டவுடன், நளன் மட்டும் அல்ல சனிபகவானும் வழிபட்ட இடம் திருவாரூர் தியாகராஜ சுவாமி.

4. காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சியை உபாசனை செய்து மாகலக்ஷ்மி சௌந்தர்ய லக்ஷ்மியானாள்.

5. இதே காஞ்சி வரதராஜ பெருமானை பிரம்மா தேவன் வழிபட்ட வரலாறு உண்டு.

6. கல்விகடவுள் என்று போற்றப்படும் ஹயக்கரிவர் ராஜராஜேஸ்வரியான லதிதா திரிபுர சுந்தரியை வணங்கி உயர்வு பெற்றாராம். 

7. திருவிண்ணகர் ஒப்பிளியப்பனை வணங்கி அவரையே பூமாதேவி மணந்து கொண்டாள்.

8. சிக்கல் சிங்காரவேலனை அகத்தியர், விஸ்வாமித்திரர், வசிட்டர், நாரதர் வழிபாட்டு உள்ளனர்.

9. திருசெந்தூர் முருக பெர்ருமானை குருபகவான் வணங்கியதாக வரலாறு.

10.கண்டியூர் ஹர சாப விமோசன பெருமானை வணங்கி சிவபெருமானே தன் சாபம் நீங்க பெற்றாராம்.

11.ராமணனும் கண்ணனும் வழிபட்ட இடம் தான் ராமேஸ்வரம்.

12.
பிரம்மாவும் விஷ்ணுவும் வழிபட்ட சிவன் இருக்கம் இடம்தான் திருநள்ளாறு 

நன்றி,
அண்ணாமலை

No comments:

Post a Comment