annamalai

annamalai

Thursday, August 13, 2015

ஜோதிடம் உண்மையா ?




 
ஜோதிடம் என்பது உண்மையா அல்லது அது வெறும் மூட பழக்கவழக்கமா ? என்ற கேள்வி பொதுவாக நிலவி வருகிறது.

ஆனால் உண்மையில் கிரகங்கள் இருப்பது உண்மையானால் ஜோதிடம் என்பதும் உண்மையே. ஆனால் அதை தெளிவாக கணித்து தர ஒருவரால் முடிந்தால் அவர்தான் சிறந்த ஜோதிடர்.. ஆனால் அது முடியுமா ? என்றால் நல்ல திறமையான வல்லுனர்களால் கண்டிப்பாக முடியும்.

ஜோதிடம் என்பது ஒரு கடல், அதில் உள்ள அனைத்து விதிகளையும் மறக்காமல் புரிந்து சரியான இடத்தில் உபயோகித்தால் அவர் சிறந்த ஜோதிடர். முன்பெல்லாம் ஜாதக கட்டத்தை பார்த்தவுடன் இந்த ஜாதகத்தில் இந்த பிரச்சனை இருக்கிறது இது இல்லை என சில நொடி நேரத்தில் சொன்ன மற்றும் சொல்லும் ஜோதிடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை கண்டிபிடிப்பது சிரமமான விஷயம்.

மேலும் தவறான வழிகாட்டியினால் உங்களுக்கு சரியான பதில் கிடைக்காமல் பெரிய குழப்பம் அடைவீர்,

குரு பெயர்ச்சியால் இந்த துன்பமா? சனி பெயர்ச்சியால் இந்த துன்பமா ? ராகு கேது பெயர்ச்சியால் இந்த துன்பமா ? தற்போது நடைபெற்றுவரும் தசையாலா ? தற்போது நடைபெற்றுவரும் புத்தியால ? இது தவிர தினசரி பலன் ? மாத பலன் ? வருட பலன் ? என எல்லவற்றையும் படித்து குழம்பி எது சரி என்று தெரியாமல் குழம்பும் மக்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

அந்த அண்ணாமலையாரை நம்புங்கள் அவரிடம் சரணாகதி அடையுங்கள் எல்லா துன்பதிற்கும் ஒரு விடை கிடைக்கும்,.

அப்படியானால் ஜோதிடம் தேவையில்லையா ? இறைவனை வழிபடும் முறை யாது ? அடுத்த பகுதியில் .. ..

அன்புடன்,

அண்ணாமலை

No comments:

Post a Comment